பயணங்கள் முடிவதில்லை: லா சலேத் மாதாக் கோயில்
கொடைக்கானல் போவதென்றாலே நமக்குத் தனி உற்ச்சாகம்தான். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்றது இன்னும் பசுமையாக நினைவிலுள்ளது. அப்போது நமது மாணவார்கள் பத்து பேருடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றிருந்தோம். அப்போது சலேத் மாதா தேவாலயத்தைப் பற்றி கேள்விப்பட்டு அங்குப் போனோம். அதன் பிறகு பலமுறை இவ்வாலயத்திற்க்குச் சென்றுள்ளோம்.
அன்மையில் இங்கு நண்பர்களுடன் போயிருந்தோம்.
இதமான குளிரும், லேசானத் தூறலும் கொண்ட ஒரு காலைப் பொழுது அது. மழைத்தூறலில் நடந்து செல்வது ரம்மியமானது. நடந்து செல்லும்போது நம்மை கடந்துச் செல்லும் மேகங்கள். குளிருக்காக போட்டிருக்கும் ஸ்வெட்டர் , மங்க்கி கேப் என்று நம்மைப் பார்க்க நமக்கே வேடிக்கையாக இருக்கும். பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவில்தான் இத்தேவாலயம் உள்ளது. நடந்தேச் சென்றோம்.
இதமான குளிரும், லேசானத் தூறலும் கொண்ட ஒரு காலைப் பொழுது அது. மழைத்தூறலில் நடந்து செல்வது ரம்மியமானது. நடந்து செல்லும்போது நம்மை கடந்துச் செல்லும் மேகங்கள். குளிருக்காக போட்டிருக்கும் ஸ்வெட்டர் , மங்க்கி கேப் என்று நம்மைப் பார்க்க நமக்கே வேடிக்கையாக இருக்கும். பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவில்தான் இத்தேவாலயம் உள்ளது. நடந்தேச் சென்றோம்.
ஒரு சிறிய மேடானப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. சிறிய கோயில்தான் , ஆனால் மிகவும் அழகானது. வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே நீல நிறக் கோடுகளுடன் எளிமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியிலுள்ள ஆல்ப்ஸ் மலை தொடரில் லா சலேத் என்ற சிற்றூரில் இது போன்றக் கோயில் உள்ளது.
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை மார்பிலேத் தாங்கிய சலேத் அன்னையின் கோலம் அனைவரையும் பரவசப்படுத்தக் கூடியது. கோயிலின் முற்றத்தில் சமாதி ஒன்று இருந்தது நமக்கு வியப்பாக இருந்தது. வழக்கமாக அப்படி இருக்காதே யாரோ ஒருவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை மார்பிலேத் தாங்கிய சலேத் அன்னையின் கோலம் அனைவரையும் பரவசப்படுத்தக் கூடியது. கோயிலின் முற்றத்தில் சமாதி ஒன்று இருந்தது நமக்கு வியப்பாக இருந்தது. வழக்கமாக அப்படி இருக்காதே யாரோ ஒருவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
யார் அவர்?
அவரை ஏன் இங்கு அடக்கம் செய்திருக்கிறார்கள்?
இந்தக் கோயிலின் வரலாறு என்ன?
என்று பல கேள்விகள் மனதில் எழ அங்குள்ளவர்களிடம் பேச ஆரம்பித்தோம்.....
அவர்களிடம் பேசியபோது கிடைத்தச் சுவையான செய்திகள் நம்மை வியக்க வைத்தது.
பிரான்ஸ் நாட்டில் லா சலேத் எனும் சிற்றூர் உள்ளது. இங்கு 1846 ஆம் ஆண்டு மெலானி, மாக்சிமின் என்ற இரு மாடு மேய்க்கும் சிறுவர்களுக்கு மேரிமாதா காட்சித் தந்துள்ளார். மேரிமாதா எங்கெல்லாம் காட்சி கொடுத்தாரோ, எங்கெல்லாம் அற்புதங்கள் செய்தாரோ அங்கெல்லாம் அந்தந்த இடங்களின் பெயராலே அழைக்கப்படுகிறார். வேளாங்கன்னி மாதா, வாடிப்பட்டி மாதா, லூர்து மாதா, லொரேத் மாதா, சலேத் மாதா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சான்சீர் என்றப் பாதிரியார் ஒரு முறை ரோம் நகரில் போப்ஆண்டவரைச் சந்தித்து விட்டுச் செல்லும் போது, மடகாஸ்கர் தீவில் தங்கியுள்ளார். அங்கு அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, சலேத் மாதாவை வேண்டிக்கொண்டால், காய்ச்சல் சரியாகிவிடும் என தெரிவித்துள்ளனர். வேண்டிக்கொண்ட சில மணி நேரத்திலே காய்ச்சலும் சரியானது. அப்போது அவர் ,
"திரும்பவும் பணி செய்வதற்காக நான் இந்தியா சென்றால், அங்கு இதே போன்று புனித சலேத் மாதா கோயில் கட்டுவேன்"
என்றார். இந்தியாவிற்கு வந்த அவர், தமிழகத்தில் பல ஊர்களுக்குப் பயணித்த அவர் கொடைக்கானல் உகந்த இடமாக இருந்ததால், அங்கு ஆலயம் கட்டி அங்கேயே பணி செய்தார். அப்போதுதான் இந்தியாவிலேயே சலேத்மாதாவிற்கென முதல் கோயில் கொடைக்கானலில் கட்டப்பட்டது.
"திரும்பவும் பணி செய்வதற்காக நான் இந்தியா சென்றால், அங்கு இதே போன்று புனித சலேத் மாதா கோயில் கட்டுவேன்"
என்றார். இந்தியாவிற்கு வந்த அவர், தமிழகத்தில் பல ஊர்களுக்குப் பயணித்த அவர் கொடைக்கானல் உகந்த இடமாக இருந்ததால், அங்கு ஆலயம் கட்டி அங்கேயே பணி செய்தார். அப்போதுதான் இந்தியாவிலேயே சலேத்மாதாவிற்கென முதல் கோயில் கொடைக்கானலில் கட்டப்பட்டது.
நோயிலிருந்து விடுபட்டதன் சான்றாக இக்கோயில் கட்டப்பட்டதால் இங்கு உடற்கோளாறு மற்றும் மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையுடன் இங்கு வந்துப் போவதைப் பார்க்கலாம்.
நாங்கள் போயிருந்தபோது கூட வெளியூரிலிருந்து சிலர் வேண்டுதலுக்காக வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
இங்குள்ள மக்கள் ஜாதி, சமய, இன, மத வேறுபாடுகளைத் தாண்டி இவ்வாலயத்திற்க்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இக்கோயிலின் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இங்கு புதன், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திருப்பலிப் பூசைகள் நடைபெறுகின்றன. அருகிலுள்ள ஊர்களிலிருந்து வேண்டுதலுக்காக பாதையாத்திரையாக வருபவர்களும் உண்டு.
நாங்கள் போயிருந்தபோது கூட வெளியூரிலிருந்து சிலர் வேண்டுதலுக்காக வந்திருந்ததைப் பார்க்க முடிந்தது.
இங்குள்ள மக்கள் ஜாதி, சமய, இன, மத வேறுபாடுகளைத் தாண்டி இவ்வாலயத்திற்க்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆகஸ்ட் மாதம் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இக்கோயிலின் திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இங்கு புதன், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் திருப்பலிப் பூசைகள் நடைபெறுகின்றன. அருகிலுள்ள ஊர்களிலிருந்து வேண்டுதலுக்காக பாதையாத்திரையாக வருபவர்களும் உண்டு.
கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து சலேத் மாதா கோயிலுக்கு வருவதற்கு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் ஏராளமாக உள்ளன.
இக்கோயிலை சினிமாவில் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். சத்யாமூவீஸின் வெள்ளை ரோஜா படத்தில் சிவாஜி இருவேடங்களில் நடித்திருப்பார். ஒருவேடத்தில் பாதிரியாராகவும் மற்றொரு வேடத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருப்பார். பாதிரியாரான சிவாஜியைக் கொன்று அந்த கோயிலிலேயே புதைத்திருப்பார்கள். கொலை செய்தவர்களை மற்றொறு போலீஸ் சிவாஜி கண்டுபிடிப்பதுதான் கதை. சர்ச்சில் சாமாதி இருப்பதை தத்ரூபமாக காட்டுவதற்குத்தான் இப்படத்தை இங்கு எடுத்திருக்கிறார்கள்.
சிவாஜிகணேசன் நடித்த மற்றொரு படமான ஞானஒளி படத்திலும் இக்கோயில் கதைக்களமாகக் காட்டப்பட்டிருக்கும். இதன் கதை மேடையில் வெற்றிகரமான நாடகமாகவும், சினிமாவாகவும் வெற்றிநடைபோட்டது. 1972 இல் வெளியான இப்படம் அப்போது அனைத்துத் தரப்பு மக்களாளும் விரும்பிப் பார்க்கப்பட்டது. சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாகிவிட்ட ஒருவன் கடமையே பெரிதெனக் கருதி அவனைக் கைது செய்யத் துடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றவாளிக்கு அடைக்கலம் தரும் பாதிரியார் என்று இவர்களைப்பற்றிக் கதை அமைக்கப் பட்டிருக்கும்.
சிவாஜி கணேசன் (குற்றவாளி), மேஜர் சுந்தரராஜன் (இன்ஸ்பெக்டர்), கோகுல் நாத் (பாதிரியார்) ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர்.
இப்போது இடையில் ஒரு வரலாற்று தகவலையும் பார்த்துவிடுவோம்.
பிரெஞ்சு இலக்கியத்தின் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர் விக்டர் கியூகோ. கியூகோ தான் வாழும் காலத்திலே மிகுந்த புகழும் பெயரும் பெற்றவர். அக்காலத்தில் அவரது லே மிசரபிள்ஸ் (Le Miserable) நாவலை வெளியிடுவதற்காக பதிப்பகங்களுக்குள் பலத்த போட்டி நடைபெற்றது. முடிவில் மூன்று லட்சம் பிராங்குகள் கொடுத்து அதன் உரிமையை பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு பதிப்பகம் விலைக்கு வாங்கியது. 1862 இல் லே மிசரபிள்ஸ் நாவல் வெளியாக போகிறதென்று ஆறுமாதங்களுக்கு முன்பாகவே பாரீஸ் நகர தெருக்கள் எங்கும் பெரிய பெரிய விளம்பரங்கள் வைக்கபட்டிருந்தன என்றால் அந்த நாவலை மக்கள் எவ்வளவு எதிர்பார்த்தார்கள் என்று புரியும். லே மிசரபிளின் முக்கியக் கதாபாத்திரங்களான ஜீன்வால் ஜீனும், பிஷப் மைரிலும் காவல்துறை அதிகாரியான ஜாவெர்த்தும் வாசகர்களிடம் மிகுந்தப் புகழ் பெற்றப் பாத்திரங்களாக திகழ்ந்தனர்.
கியூகோவின் இந்த லே மிசரபிள்ஸ் நாவல் தமிழில் ஏழை படும்பாடு என்ற பெயரில் நாகையா அவர்கள் நடித்து ராம்நாத் இயக்கி நாடகமாக வெளியாகியிருக்கிறது. இந்தியில் குந்தன் என்ற பெயரில் சேராப் மோடி இயக்கியிருக்கிறார். தமிழிலே இந்த நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் "ஞான ஒளி ". தமிழில் இந்த நாவலை ச.து.சு யோகியார் மொழியாக்கம் செய்திருந்தார்.
பிரெஞ்சு இலக்கியத்தின் மிகப்புகழ்பெற்ற எழுத்தாளர் விக்டர் கியூகோ. கியூகோ தான் வாழும் காலத்திலே மிகுந்த புகழும் பெயரும் பெற்றவர். அக்காலத்தில் அவரது லே மிசரபிள்ஸ் (Le Miserable) நாவலை வெளியிடுவதற்காக பதிப்பகங்களுக்குள் பலத்த போட்டி நடைபெற்றது. முடிவில் மூன்று லட்சம் பிராங்குகள் கொடுத்து அதன் உரிமையை பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு பதிப்பகம் விலைக்கு வாங்கியது. 1862 இல் லே மிசரபிள்ஸ் நாவல் வெளியாக போகிறதென்று ஆறுமாதங்களுக்கு முன்பாகவே பாரீஸ் நகர தெருக்கள் எங்கும் பெரிய பெரிய விளம்பரங்கள் வைக்கபட்டிருந்தன என்றால் அந்த நாவலை மக்கள் எவ்வளவு எதிர்பார்த்தார்கள் என்று புரியும். லே மிசரபிளின் முக்கியக் கதாபாத்திரங்களான ஜீன்வால் ஜீனும், பிஷப் மைரிலும் காவல்துறை அதிகாரியான ஜாவெர்த்தும் வாசகர்களிடம் மிகுந்தப் புகழ் பெற்றப் பாத்திரங்களாக திகழ்ந்தனர்.
கியூகோவின் இந்த லே மிசரபிள்ஸ் நாவல் தமிழில் ஏழை படும்பாடு என்ற பெயரில் நாகையா அவர்கள் நடித்து ராம்நாத் இயக்கி நாடகமாக வெளியாகியிருக்கிறது. இந்தியில் குந்தன் என்ற பெயரில் சேராப் மோடி இயக்கியிருக்கிறார். தமிழிலே இந்த நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் "ஞான ஒளி ". தமிழில் இந்த நாவலை ச.து.சு யோகியார் மொழியாக்கம் செய்திருந்தார்.
- பாலா பாரதி


No comments:
Post a Comment