ஒத்தக்கல் மந்து
நீலகிரி மலையில் வாழும் தோடர் பழங்குடி இனத்தவர் வாழும் பகுதிகளுக்கு 'மந்து' என்று பெயர். அவற்றில் தாவரவியல் பூங்கா அருகே ஒரு மந்து உள்ளது. இங்கே ஒற்றைக் கையுடன் தோடர் இனக்குழுத் தலைவர் ஒருவர் இருந்துள்ளார். அதனால் இந்த மந்து 'ஒத்தக்கை மந்து' என அழைக்கப்பட்டது. இம்மந்தில் உள்ள ஒற்றைக்கல்லை இவர்கள் வணங்கி வந்ததால் காலப்போக்கில் இவ்வூர் 'ஒத்தக்கல் மந்து' என்றானது. பிற்காலத்தில் இவ்விடத்தைச் சுற்றி ஆங்கிலேயர்கள் குடியேறினர். ஆங்கிலேயர்கள் இவ்வூரை ஒத்தகமண்டு Ottachamandhu என்றழைத்தனர். அச்சொல் மீண்டும் தமிழுக்கு வரும்போது உதகண்டலம் Ottachamandalam என்று மருவி இன்று ஊட்டி Ooty ஆகச் சுருங்கி அதன் வரலாற்றுப் பெயரிலிருந்து வெகு தொலைவு சென்றுவிட்டது.


No comments:
Post a Comment