பயணங்கள் முடிவதில்லை: விழுப்புரம் மாவட்ட தொல்லியல் பதிவுகள்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. வீரராகவன் அவர்களும் அவரது துணைவியார் திருமதி. மங்கயர்கரசி அவர்களும், விழுப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வெட்டுகள், நடுகற்கள், பாறை ஓவியங்கள் போன்ற தொல்லியல் சான்றுகளை கண்டறிந்து வெளிஉலகிற்கு தெரிவிக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளையும், இருபதுக்கும் மேற்பட்ட நடுகற்களையும், பத்துக்கும் மேற்பட்ட பாறை ஓவியங்களையும், இருபதுக்கும் மேற்பட்ட சிற்பங்களையும் கண்டறிந்துள்ளனர்.
தொல்லியல் ஆய்வில் கணவன் மனைவியாக சேர்ந்து பணியாற்றும் இவர்களைப் பெற்றது தமிழகத்துக்கு பெருமை என்றால் அது மிகையில்லை.
தொல்லியல் ஆய்வில் கணவன் மனைவியாக சேர்ந்து பணியாற்றும் இவர்களைப் பெற்றது தமிழகத்துக்கு பெருமை என்றால் அது மிகையில்லை.
வீரராகவன் ஐயா சமீபத்தில் நம்மை விழுப்புரம் பகுதியில் அவர் கண்டுபிடித்த நடுகற்கள் மற்றும் பாறை ஓவியங்களைக் காண அழைத்திருந்தார். அவர்கள் கண்டுபிடித்தவற்றில் சிலவற்றையாவது சென்று பார்க்கலாம் என்று திட்டமிட்டு திரு. வீரராகவன் ஐயாவை சந்திக்கச் சென்றேன். நான் திருச்சியிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கும் அவர் விழுப்புறத்திலிருந்து உளுந்தூர் பேட்டைக்கு வந்துவிடுவதாகவும் உளுந்தூர்பேட்டையிலிருந்து இருவரும் சேர்ந்து சிக்காடு போவதாகவும் திட்டமிட்டிருந்தோம். திட்டமிட்டபடியே அவரை விழுப்புரத்தில் சந்தித்து அங்கிருந்து சேலம் செல்லும் சாலையில் பயணித்தோம்.
முதலில் உளுந்தூர்பேட்டையிலிருந்து 24 கி.மீ தொலைவிலுள்ள தியாகதுருக்கம் அடைந்து அங்கிருந்து 8 கி.மீ தொலைவிலுள்ள சிக்காடுக்கு வந்து சேர்ந்தோம். சிக்காட்டில் வேடப்பார் கோயில் உள்ளது. இவ்வூரின் ஏரிக்கரையில் கிழக்கு நோக்கிய துர்கை சிலை ஒன்று உள்ளதாகவும் அதைப்பார்க்கலாம் என்றும் அந்த ஏரிக்கரைக்கு நம்மை அழைத்துச் சென்றார் ஏரிக்கரையில் வடக்கு நோக்கி செல்லும் சிறிய பாதையில் போகும்போது, இடப்புறம் காணப்படும் கரையில் ஒரு சிறிய கோயில் போன்ற கட்டுமானம் தென்படுகிறது. மேற்பகுதி மூடியிருக்கவில்லை.
6 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட மேற்கூரையில்லாத இடத்தில் சிவப்பு துணியால் சுற்றப்பட்ட துர்கை சிலையைப் பார்த்தோம், அழகிய, பழமையான இந்த துர்கை சிலை 7 -8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இச்சிலையின் இடப்புறத்தில் ஸ்ரீ நந்திபருமன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. வலதுபுறத்தில் சிங்கம், சூலம், நீண்டவாள், சக்கரம், அம்பு மற்றும் அபய முத்திரை ஆகியவையும், இடதுபுறத்தில் மான், கிளி, சங்கு, வில், கேடயம், கடிஅஸ்தம் (கடிமுத்திரை) ஆகியவையும் காணப்படுகின்றன. எட்டு கைகளுடன் கூடிய இச்சிற்பத்தின் வலதுபுறத்தில் நவகண்டம் ஒன்றின் உருவமும் இடதுபுறத்தில் ஒருவர் வணங்குவது போன்ற உருவமும் காணப்படுகின்றன.
இந்து மத இறைவழிபாட்டில், 100 க்கு 90 சதவீத பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றி யிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செய்யப்படுகின்றன.
அங்கிருந்து கிளம்பி ஊருக்குள் வந்து வேடப்பர் கோயிலுக்கு எதிர்புறமுள்ள சாலையில் சென்றோம். அது ஒரு மலையடிவாரம். இந்த மலையடிவாரத்தில் செல்லியம்மன் கோயிலும் அதன் எதிரே தாமரைக்குளமும் இருக்கின்றன இந்த செல்லியம்மன் கோயிலில் சிலையிருக்குமிடத்திற்கு சற்றுமேலே சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. ஆனால் இவற்றின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. நான்கு மனித கோட்டுருவங்களும், நீண்ட வாலுடைய குருவிபோன்ற தோற்றத்தைக் கொண்ட உருவமும் உள்ளது. அவற்றைப் பதிவு செய்து கொண்டோம்.
அடுத்து நடுகல் சிற்பத்தை பார்ப்பதற்கு கல்சிறு நாகலூரை நோக்கி பயணமானோம்.
அடுத்து நடுகல் சிற்பத்தை பார்ப்பதற்கு கல்சிறு நாகலூரை நோக்கி பயணமானோம்.
கல்சிறுநாகலூர்:
அடுத்து விழுப்புரம் வீரராகவன் ஐயா அவர்கள் தான் கண்டுபிடித்த நடுகற்களுள் ஒன்றை காண நம்மை கல்சிறுநாகலூர் அழைத்துச் சென்றார். கல்சிறுநாகலூர் சிறிய அழகான ஊர். அவ்வூரின் அம்மன் கோயிலில் வண்டியை நிறுத்திவிட்டு வயலில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். நெற்பயிற், சோளம் பயிற்செய்யப்பட்ட வயலின் வரப்புகளில் வழியே பயணத்தை தொடர்ந்தோம், தொலைவில் ஒரு சிறிய குன்றைக் காண்பித்தார்கள். அங்குதான் போகவேண்டுமாம். அங்கே போக சாலை உள்ளதாம், ஆனால் பாறையை உடைத்து கற்களை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகளால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் நமது வண்டி செல்வது கடிணம் அதனால்தான் இந்த நீண்ட நடை.
அடுத்து விழுப்புரம் வீரராகவன் ஐயா அவர்கள் தான் கண்டுபிடித்த நடுகற்களுள் ஒன்றை காண நம்மை கல்சிறுநாகலூர் அழைத்துச் சென்றார். கல்சிறுநாகலூர் சிறிய அழகான ஊர். அவ்வூரின் அம்மன் கோயிலில் வண்டியை நிறுத்திவிட்டு வயலில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். நெற்பயிற், சோளம் பயிற்செய்யப்பட்ட வயலின் வரப்புகளில் வழியே பயணத்தை தொடர்ந்தோம், தொலைவில் ஒரு சிறிய குன்றைக் காண்பித்தார்கள். அங்குதான் போகவேண்டுமாம். அங்கே போக சாலை உள்ளதாம், ஆனால் பாறையை உடைத்து கற்களை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகளால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் நமது வண்டி செல்வது கடிணம் அதனால்தான் இந்த நீண்ட நடை.
அந்த குன்றை நெருங்கியபோது, இராஜாராமன் என்பவரின் வயலில் இருந்தோம். இங்கு இரண்டு நடுகற்கள் உள்ளதாம். வயலின் வரப்பை ஒட்டி இருக்கும் தைலமரம்இந்த நடுகற்களைச் சுற்றி வளர்ந்து அவை இருப்பதை மறைத்திருந்தது. அது பெரியமரமல்ல, அரிவாள் எதுவும் கொண்டு செல்லாததால் கையாலேயே அவற்றை நீக்கிவிட்டோம்.
வீரராகவன் ஐயா பையில் கொண்டுவந்திருந்த கருப்பு மையை லேசாக அந்தச் சிற்பத்தில் ஒத்தியெடுக்க, அந்த சிற்பத்திலுள்ள உருவங்கள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன. இரண்டு சிற்பக்களிலும் இடக் கையில் கேடயத்தைத் தாங்கிக் கொண்டும் வலக்கையில் நீண்ட வாலையும் ஏந்திக் கொண்டு போர்க்கோலத்தில் நிற்க்கும் போர்வீரன் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு சிற்பத்தில் மட்டும் அவ்வீரனை பின்தொடரும் சிறிய உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கொண்டை போட்டுள்ள அவ்வுருவங்களைக் கொண்ட அந்த நடுகற்கள் மண்ணில் நன்றாகப் புதைந்திருக்கிறது.
அவ்வூர்ர் மக்கள் அவற்றை தொம்பன், தொம்பச்சி என்று அழைக்கிறார்கள். ஆனால் இவையிரண்டும் ஆண் சிற்பங்கள்தான்.
அவ்வூர்ர் மக்கள் அவற்றை தொம்பன், தொம்பச்சி என்று அழைக்கிறார்கள். ஆனால் இவையிரண்டும் ஆண் சிற்பங்கள்தான்.
தொம்பன், தொம்பச்சி பற்றிக் கேட்டால் ஒரு கதை சொல்கிறார்கள். அந்தகாலத்தில் இங்கு வாழ்ந்த ராஜாவும், ராணியும் மாலை வேளைகளில் இங்கு வந்து மகிழ்ச்சியாக இருப்பார்களாம். இரண்டு குன்றுகளுக்கும் இடையில் கயிறைக் கட்டி அதில் பயணம் செய்து மகிழ்ந்து வந்தார்களாம். ஒருநாள் முனிவர் ஒருவர் விட்ட சாபத்தின் காரணமாக அந்தக்கயிறு அருந்து விழுந்துவிட்டதாம். அவர்கள் விழுந்து இறந்தஇடத்திலேயே இந்த சிற்பங்களை அமைத்து மக்கள் வழிபட்டுவந்தார்களாம்.
இந்த சிற்பங்கள் 6 அல்லது 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வீரராகவன் ஐயா கூறினார். மேலும் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளிலெல்லாம் பானை ஓடுகள் சிதறிக்கிடந்தன. எனவே அப்பகுதியில் அக்காலத்தில் குடியிருப்புகள் இருந்திருக்க வேண்டும். அக்காலத்தில் ஒரு ஊர் இருந்தால் அதன் வடமேற்கு திசையில் அவர்களின் இடுகாடு இருக்கும், எனவே இந்த சிற்பங்களின் தென்கிழக்குத் திசையில் ஊர் இருந்திருக்க வேண்டும். அந்த நடுகற்கள் இருக்குமிடத்திற்கு அருகிலுள்ள பாறையில் செந்நிறபாறை ஓவியங்கள் உள்ளன. பாறையின் வளைந்த கீழ்ப்பகுதியில் பத்துபேர் தங்குமளவிற்கு இடமிருந்தது. அவ்விடத்தின் பாறைமேற்பகுதியில் இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆனால் இவை சிதைந்த நிலையிலுள்ளதால் அவற்றின் உருவத்தை உறுதியாகக் கூற முடியவில்லை. அவற்றையெல்லாம் நமது கேமராவில் படமெடுத்துக் கொண்டு வந்தவழியே வண்டிக்குத் திரும்பினோம்.
இந்த சிற்பங்கள் 6 அல்லது 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வீரராகவன் ஐயா கூறினார். மேலும் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளிலெல்லாம் பானை ஓடுகள் சிதறிக்கிடந்தன. எனவே அப்பகுதியில் அக்காலத்தில் குடியிருப்புகள் இருந்திருக்க வேண்டும். அக்காலத்தில் ஒரு ஊர் இருந்தால் அதன் வடமேற்கு திசையில் அவர்களின் இடுகாடு இருக்கும், எனவே இந்த சிற்பங்களின் தென்கிழக்குத் திசையில் ஊர் இருந்திருக்க வேண்டும். அந்த நடுகற்கள் இருக்குமிடத்திற்கு அருகிலுள்ள பாறையில் செந்நிறபாறை ஓவியங்கள் உள்ளன. பாறையின் வளைந்த கீழ்ப்பகுதியில் பத்துபேர் தங்குமளவிற்கு இடமிருந்தது. அவ்விடத்தின் பாறைமேற்பகுதியில் இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன. ஆனால் இவை சிதைந்த நிலையிலுள்ளதால் அவற்றின் உருவத்தை உறுதியாகக் கூற முடியவில்லை. அவற்றையெல்லாம் நமது கேமராவில் படமெடுத்துக் கொண்டு வந்தவழியே வண்டிக்குத் திரும்பினோம்.
வீரராகவன் ஐயாவை விழுப்புரத்தில் இறக்கிவிட்டபின் நன்றி கூறிவிட்டு வண்டியை திருச்சி நோக்கி திருப்பினோம்.
பயணங்கள் தொடரும்...
- பாலா பாரதி




No comments:
Post a Comment