கடம்பர் கோயில் நவகண்டம்
கரூர் மாவட்டம் குளித்தலையில் அமைந்துள்ள கடம்பர் கோயில் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். பெயருக்குத் தகுந்தாற்போல் இக்கோயிலினுள் கடம்ப மரங்கள் நிறையக் காணப்படுகின்றன.
இக்கோயில் வளாகத்தினுள் நவகண்டச் சிற்பம் உள்ளது. வெகுபுடைப்பாகவும் அழகாகவும் வடிக்கப்பட்ட நாயக்கர்காலத்தைச் சேர்ந்த இச்சிற்பம் இதை வடித்த சிற்பியின் கைத்திறனைக் காட்டுகிறது. தலைமுடி கொண்டையாக வீரனின் இடப்புறம் முடியப்பட்டுள்ளது. காதுகளையும் கழுத்தையும் ஆபரணங்கள் அழகு செய்கின்றன. இடையில் அழகான வேலைப்பாடுடன் குறுவாள் ஒன்றையும் காணமுடிகிறது. வீரனின் இடதுகை நீண்ட வாளின் மீது தாங்கியுள்ளது. வலதுகையால் நீண்ட வாளினை பின் கழுத்துப் பகுதியில் செலுத்தி தன் தலையை தானே அரிந்து கொள்கிறான்.( நன்றி: வீரராகவன் ஐயா)

No comments:
Post a Comment