"பொங்கு சாமரை யேந்திப்
புடைபுடை யியக்கர்நின் றிரட்டச்
சிங்க வாசனத் திருந்து
தெளிந்தொளி மண்டில நிழற்றத்
திங்கள் முக்குடை கவிப்பத்
தேவர்தந் திருந்தவை தெருள
அங்க பூவம தறைந்தாய்
அறிவர்தம் அறிவர்க்கும் அறிவா"
அறிஞருள்ளும் சிறந்த அறிஞர்க்கும் மேலான அறிவை உடையோய்! கந்தருவர் உன் இரு பக்கங்களிலும் நின்று கவரிகளை அசைப்பர். நீ அரியணையில் அமர்ந்தருளி, திருஒளி மண்டிலங்கள் மூன்றும் விளங்கி ஒளிரவும், முக்குடைகள் கவிழ்ந்து நிழல் தரவும், மூன்று ஆகமங்களைத் திருவாய் மலர்ந்தருளினாய். ஆகவே, உன் அடியிணை பணிவோம்.
திருச்சி புதுக்கோட்டை சாலையிலுள்ள ஆளுருட்டிமலையின் முகப்பில் காணப்படும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அருக தெய்வத்தின் சிற்பம் மேற்க்கண்ட பாடலில் வர்ணிக்கப்பட்டவாறே உள்ளது வியப்பாக இருக்கிறது.
- பாலா பாரதி

No comments:
Post a Comment